இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் மேலும் இரண்டு போட்டிகள் இன்றைய தினம் இடம்பெறவுள்ளன.
இதன்படி, இன்று (02) இடம்பெறவுள்ள முதல் போட்டியில் பங்களாதேஷ் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதவுள்ளன.
அதற்கமைய, குறித்த போட்டி டுபாயில் இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30க்கு ஆரம்பமாகவுள்ளது.
அதேநேரம், இன்றைய இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நமீபியா அணிகள் மோதவுள்ளன.
இந்தப் போட்டியானது அபுதாபியில் இலங்கை நேரப்படி இரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ளது.