மெக்சிக்கோ நகரின் அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வீதி விபத்தில் 19 பேர் பலியாகினர்.
மூவர் படுகாயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச் சாவடி அருகே பாரஊர்தி ஒன்று பல வாகனங்களுடன் மோதியுள்ளது.
இந்த விபத்தை அடுத்து பல வாகனங்கள் தீப்பற்றி கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆறு வாகனங்களில் பயணித்தவர்களே இந்த விபத்தில் பலியானதாகக் அந்நாட்டு காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.