மேல் மாகாணத்தில், சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாத, 327 பயணிகள் போக்குவரத்து பஸ்களின் சாரதிகள் மற்றும் 68 குளிரூட்டப்பட்ட சொகுசு ரக பஸ்களின் சாரதிகளுக்கும் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன், மேல் மாகாணத்தில் 510 கடைகளின் உரிமையாளர்களுக்கும் இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேல்மாகாண மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுகிறார்களா? என்பதை கண்டறியும் விசேட நடவடிக்கை நேற்று பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை முன்னெடுக்கப்பட்டது.