இருபதுக்கு 20 உலகக் கிண்ண தொடர் நிறைவடைந்துள்ள நிலையில், சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் மிகவும் மதிப்புமிக்க இருபதுக்கு 20 அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆறு அணிகளை சேர்ந்தவர்கள் இந்த அணியில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்ட அவுஸ்திரேலியா, இரண்டாவது நிலையாக தெரிவான நியூசிலாந்து, அரை இறுதி வரை முன்னேறிய இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தானிய அணிகளுடன் இலங்கை மற்றும் தென் ஆபிரிக்க அணிகளை சேர்ந்தவர்களும் தெரிவாகியுள்ளனர்.
இலங்கை அணியின் சார்பாக துடுப்பாட்ட வரிசையில் இரண்டாவதாகவுள்ள சரித் அசலங்க மற்றும் சகலதுறை ஆட்டக்காரரும், தொடரில் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றியவருமான வனிது ஹசரங்க ஆகியோர் தெரிவாகியுள்ளனர்.
அதேநேரம், இந்த அணியில் இந்திய அணியில் எவரும் உள்ளடக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.