விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு

child 2 586x365 1
child 2 586x365 1

யாழ்ப்பாணம் – வடமராட்சி பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

குடவத்தை – துண்ணாலை, கிழக்கு கரவெட்டியை சேர்ந்த மயூரன் மகிந்தன் என்ற 8 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.

குறித்த சிறுவன் நேற்றைய தினம் மாலை தனது நண்பர்களுடன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த வேளை திடீரென மயங்கி விழுந்துள்ளான்.

சிறுவனை உடனடியாக , பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், உடல் கூற்று பரிசோதனைக்காக சிறுவனின் சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.