அரியாலை அருளம்பலம் வீதியில் வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த பகுதியிலுள்ள காணி ஒன்றில் துப்பரவு நடவடிக்கை மேற்கொண்டபோதே இன்று காலை கிரனைட் மற்றும் இரண்டு மிதிவெடிகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பகுதியில் மேலும் வெடிபொருட்கள் இருக்கலாம் என்ற அச்சம் காரணமாக துப்பரவு பணிகள் இடை நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்குரிய நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.