வவுனியாவில் சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளமையால் இன்று நீதிமன்ற செயற்பாடுகள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.
செம்மலை நீராவியடி ஆலய விவகாரம் தொடர்பில் பௌத்த பிக்குகள் நீதிமன்ற தீர்ப்பை அவமதித்தமை மற்றும் சட்டத்தரணிகள் மீது தாக்குதல் நடத்தியமை என்பவற்றை கண்டித்து வடமாகாண சட்டத்தரணிகள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அதற்கமைவாக வவுனியாவிலும் சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக நீதிமன்ற வழக்குகள் விசாரணைகளின்றி திகதியிடப்பட்டன. நீதிமன்றம் வந்த மக்களும் வழக்கு விசாரணைகள் நடைபெறாமையால் திரும்பிச் சென்றதை அவதானிக்க முடிந்தது.
இதேவேளை, பொலிசார் மற்றும் திணைக்களங்களால் தாக்கல் செய்யப்பட்ட தண்டப்பணம் செலுத்தும் வழக்குகள் மட்டும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.