அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த, கம் கிலெஸ்பி என்பவருக்கு, போதை மருந்து கடத்தல் வழக்கில், சீனாவின் குவாங்சோ மக்கள் நீதிமன்றம், மரண தண்டனை விதித்துள்ளது.
மேலும், கம் கிலெஸ்பியின் சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்யவும், நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பரவல் தொடர்பாக, அவுஸ்ரேலியா- சீனா இடையே மோதல் முற்றி வரும் நிலையில், இந்த தீர்ப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.