நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க, சர்வதேச நாணய நிதியம் அல்லது மற்றொரு வெளிநாட்டு நிறுவனத்திடமிருந்து சலுகை வட்டி அடிப்படையில் நீண்ட கால கடனைப் பெற வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மத்திய கொழும்பில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.