நாட்டில் கொரோனா தொற்றுறுதியான மேலும் 21 பேர் குணமடைந்துள்ளனர் என தேசிய தொற்று நோய்த் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுறுதியான 2317 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளனர்.
நாட்டில் இதுவரையில் 2810 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது.
இந்தநிலையில் கொரோனா தொற்றுறுதியான 482 பேர் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் ஆலோசகராக பணியாற்றிய ஒருவருக்கு இரண்டாது முறை மேற்கொண்ட பீ.சீ.ஆர்.பரிசோதனையின் போது அவருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது.
எனவே அவர் தொடர்பினை பேணிய அம்பாறை – ஹிங்குரான – முவன்கோல பகுதியை சேர்ந்தவர்கள் இன்றைய தினம் பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
எனினும் அதில் எவருக்கும் கொரோனா தொற்றுறுதியாகவில்லை என அம்பாறை பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.
இன்று இதுவரையில் யாருக்கும் கொரோனா தொற்றுறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.