இந்தியாவில் திருவையாறு அருகே மூதாட்டி வீட்டின் உள்ளே புகுந்து, பணம் மற்றும் நகைகளை குரங்குகள் துாக்கிச் சென்றன.
தஞ்சாவூர், திருவையாறு அருகே வீரமாங்குடியைச் சேர்ந்த 70 வயதுடைய வயோதிப பெண் தனியாக குடிசை வீட்டில் வசித்து வந்துள்ளார்.
நேற்று காலை, வயோதிப பெண் வீட்டின் முன், துணி துவைத்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது, அங்கு வந்த, 10க்கும் மேற்பட்ட குரங்குகள், குடிசையின் உள்ளே புகுந்து, வாழைப்பழம், பச்சரிசி, அரிசி பையில் இருந்த மோதிரம், காதணி 25 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு ஓடியுள்ளது.
சத்தம் கேட்ட வயோதிப பெண் , குரங்குகளை விரட்டியுள்ளார்.
குரங்குகள், அருகில் உள்ள வைத்தியசாலை மாடியில் வைத்து பழங்களையும், அரிசியையும் தின்றுள்ளன.
கிராம மக்கள், குரங்குகளை விரட்டியுள்ளனர். ஆனாலும் பணம், நகை ஆகியவற்றை குரங்குகள் துாக்கிச் சென்று விட்டது.
கிராம மக்கள் எவ்வளவு முயன்றும் பணம், நகையை மீட்க முடியவில்லை. இதனால்,வயோதிப பெண் மனம் உடைந்து போயுள்ளார்.