உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸின் தாக்கம் தற்போது இந்தியாவிலேயே அதிகமாகக் காணப்படுகிறது.
அதற்கமைய கடந்த 24 மணி நேரத்தில் 79 ஆயிரத்து 457 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து இந்தியாவில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 36 இலட்சத்து 19 ஆயிரத்து 169 ஆக அதிகரித்துள்ளது.
இதேநேரம் கடந்த 24 மணி நேரத்தில் 960 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழப்புகளின் மொத்த எண்ணிக்கை 64 ஆயிரத்து 617 ஆக அதிகரித்துள்ளது.
அதேவேளை, 27 இலட்சத்து 72 ஆயிரத்து 928 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.