ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக் காலம் நீடிப்பு

Untitled 1 1

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக் காலமானது ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணை செய்வதற்காக மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் விசாரணை ஆணைக்குழுவின் பதவிக் காலமானது டிசம்பர் மாதம் 20ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இவ் ஆணைக்குழுவானது 2019 செப்டம்பர் 20ஆம் திகதி நியமிக்கப்பட்டதுடன், இந்த இந்த வருடம் செப்டெம்பர் 20ஆம் திகதியுடன் பதவிக்காலம் நிறைவடையவிருந்தது.

இந்த நிலையிலேயே விசாரணை ஆணைக்குழுவின் பதவிக் காலமானது மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டது. இவ் ஆணைக்குழுவின் பதவிக்காலம் இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் நீடிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.