மாத்தறை சிறைச்சாலை கைதிகளுக்கு ஹெரோயின் போதை பொருளை விற்பனை செய்த இரு பிரதான சந்தேக நபர்கள் கைது செய்யயப்பட்டுள்ளனர்.
ஹேரோயின் விற்பனை செய்யும் பிரதான வியாபாரிக்கு ஒத்தாசை புரிந்த இருவரே இவ்வாறு கைது செய்துள்ளளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாத்தறை மேல் நீதிமன்ற வளாகத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய போதே இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் இருந்து 2 கிராமுக்கும் அதிகமான ஹெரோயின் போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
அவர்கள் சிறைச்சாலை அதிகாரி ஒருவருக்கு சொந்தமான மோட்டர் சைக்கிளில் அந்த இடத்திற்கு வருகை தந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.