2021 ஆம் ஆண்டுக்கான – பாடசாலை மாணவர்களுக்கான இலவச பாடநூல்கள் அச்சிடும் நடவடிக்கைகளை ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி 400 வகையான இலவச பாடநூல்கள் அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தின் ஊடாகவும், திறந்த பெறுகைக் கோரல் முறை மூலம் தெரிவுசெய்யப்பட்ட தனியார் அச்சக நிறுவனங்கள் ஊடாகவும் அச்சிடப்படவுள்ளது.
இதுதொடர்பில் கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் அமைச்சவை கூட்டத்தில் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவையும் முழுமையான அங்கிகாரம் வழங்கியுள்ளது.
அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட நிரந்தர பெறுகை குழுவின் சிபாரிசுக்கு அமைய 106 பாடநூல் வகைகளின் 13,890,000 பிரதிகள் அரச அச்சகக் கூட்டுத்தாபனத்திலும், 294 பாடநூல் வகைகளின் 25,541,500 பிரதிகள் திறந்த பெறுகை கோரல் முறை ஊடாக தெரிவு செய்யப்பட்ட தனியார் அச்சக நிறுவனம் ஊடாகவும் அச்சிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.