நாட்டில் கொரோனா தனிமைப்படுத்தல் காலத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த மேலும் 136 பேர் இன்று தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். அதன்படி, கந்தகாடு, பியாகாமா மற்றும் நீர்கொழும்பு ஆகிய இடங்களில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களிலிருந்து இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை 43,684 நபர்கள் கட்டாய தனிமைப்படுத்தலை நிறைவு செய்துள்ளனர் என்றும் தற்போது 6,182 நபர்கள் 66 தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களில் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் கொரோனா தடுப்புக்கான தேசிய செயல்பட்டு மையம் தெரிவித்துள்ளது.