தனுறொக்கி வாள் வெட்டுக்குழுவின் தலைவர் தனுவின் மீது இன்று நண்பகல்(26) காரில் வந்த நபர்களால் வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பெருமாள் கோவில் பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வாள்வெட்டில், படுகாயமடைந்த தனு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு சென்ற விசேட அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றதுடன், சம்பவ இடத்தில் கார், வாள்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.