யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்தில் கிருமி நீக்கும் நடவடிக்கை!

யாழ்ப்பாண பொலிஸார் யாழ்ப்பாண மாநகர சபையின் சுகாதார பிரிவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண நகரப் பகுதி மற்றும் மத்திய பேருந்து நிலையம், தனியார் பேருந்து தரிப்பிடம், யாழ் நகர வர்த்தக நிலையங்களிற்கு கிருமி தொற்று நீக்கி மருந்து விசிறும் பணி இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

புங்குடுதீவு பகுதியைச் சேர்ந்தவர்கள் மினுவாங்கொடை பகுதியில் இருந்து வந்தவேளை; யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற அவர்களுக்கான பிசிஆர் பரிசோதனையின் போது COVID 19 தொற்று உறுதியாகியுள்ள நிலையில் யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்தில் இக் கிருமிநீக்கும் நடவடிக்கை இடம்பெற்றது.

சுகாதார தரப்பினருடன், யாழ்ப்பாணம் பொலிஸார் மற்றும் மாநகர சபையினர் இணைந்து இந்த கிருமி நீக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டனர்.