நாட்டில் தற்பொழுது அதிகரித்துள்ள கொரோன நோய்த்தொற்றை அடுத்து சுகாதாரத் துறை வழங்கியுள்ள பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகளுக்கு ஏற்ப பொது மக்களுக்கு ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகைதருதல் மற்றும் அலுவலகத்தில் குறைந்தளவான அலுவலர்கள் சேவையை வழங்குதல் என்பவற்றின் மூலம் ஏற்படும் அசௌகரியங்களை கவனத்திற் கொண்டு, அஞ்சல் மற்றும் தொலைபேசி ஊடாக முன்வைக்கப்படும் பொது மக்கள் கோரிக்கைகளுக்கு பதிலளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் இன்று ஊடக அறிக்கை ஒன்றினையும் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .
அந்த வகையில் ஜனாதிபதி அலுவலகத்தின் பொதுமக்கள் தொடர்பாடல் பிரிவு, ஒம்புட்ஸ்மன் அலுவலகம் மற்றும் ஜனாதிபதி நிதியத்துடன் பின்வரும் இலக்கங்களின் ஊடாக தொடர்புகொள்ள முடியும்.
ஜனாதிபதி பொதுமக்கள் தொடர்பாடல் பிரிவு – 0114354550/0112354550
தொலைநகல் 0112348855
ஒம்புட்ஸ்மன் அலுலவகம் – 0112338073
ஜனாதிபதி நிதியம் – 0112354354
கிளை எண் (4800/4814/4815/4818)
தொலைநகல் – 0112331243
ஆகிய இலக்கங்கள் மூலம் பொது மக்களுக்கு ஜனாதிபதி அலுவலகத் துடன் தொடர்பு கொள்ள முடியும் எனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.