மெக்ஸிகோ முன்னாள் பாதுகாப்பு அமைச்சர், சீன் புகோஸ் செபெடா கைது செய்யப்பட்டுள்ளார்.
72 வயதான சீன் புகோஸ் செபெடா, போதைப்பொருள் மற்றும் பண மோசடி குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆயுதப்படையில் 54 ஆண்டுகள் பணியாற்றியவரும் 2012ஆம் முதல் 2018ஆம் வரை தேசிய பாதுகாப்பு செயலாளராக பணியாற்றியவருமான சீன் புகோஸ் செபெடா அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்துக்கு வந்த போது கைது செய்யப்பட்டார்.
மெக்ஸிகோவில் நடக்கும் வன்முறைகளுக்கு முக்கிய காரணமாக கருதப்படும் போதைப்பொருள் சந்தை செயற்பட, இலஞ்சம் வாங்கிக் கொண்டு அனுமதி அளித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.