ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
13 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 43 ஆவது ஆட்டத்தில் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதின.
துபாயில் ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஐதராபாத் அணி களத்தடுப்பை தேர்வு செய்ய பஞ்சாப் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.126 ஓட்டங்களை 7இலக்குகளை இழந்து பெற்றுக்கொண்டது .
துடுப்பட்டத்தில் பஞ்சாப் அணிசார்பில் நிக்கோலஸ் பூரன் 32 ஓட்டங்களையும் கே.எல்.ராகுல் 27ஓட்டங்களையும் அதிரடி யாக பெற்றுக்கொடுத்தனர் .
பந்து வீச்சில் ஐதராபாத் அணி சார்பில்,ரஷீத் கான்,ஜேசன் ஹோல்டர்,சந்தீப் சர்மா ஆகியோர் தலா இரண்டு இலக்குகளை வீழ்த்தினார் .
பதிலுக்கு இலகுவானஇலக்கு நோக்கி துடுப்படுத்ததடிய ஐதராபாத் அணி தமக்கு வழங்கப்பட்ட இருபது பந்துபரிமாற்றத்தில் வெறும் 114 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 12 ஓட்டங்களால் தழுவியது
அணி சார்பில் அணித்தலைவர் டேவிட்வோனர் 35 ஓட்டங்களையும் விஜய் சங்கர் 26 ஓட்டங்களையும் அதிகப்படியாக பெற்றுக்கொடுத்தனர் .
பந்து வீச்சில்பஞ்சாப் அணிசார்பில் கிறிஸ் ஜோர்டான் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா மூன்று இலக்குகளை சாய்த்தார்
போட்டியின் ஆட்டநாயகனாக கிறிஸ் ஜோர்டான் தெரிவானார்