மாலி நாட்டின் முன்னாள் ஜனாதிபதி அமடோ டூமானி டூரே தனது 72 வயதில் காலமானதாக அவரது குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
துருக்கியில் அமடோ டூமானி டூரே உயிரிழந்தார். ”அங்கு அவர் உடல்நலக் குறைவு காரணங்களுக்காக சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார் என அவரது மருமகன் ஓமர் டூரே செய்தி நிறுவனமான ஏ.எப்.பி யிடம் தெரிவித்துள்ளார்.
டூரே 2002 முதல் 2012 வரை மாலியின் ஜனாதிபதியாக இருந்தார்.
முன்னாள் இராணுவ ஜெனரல் மேற்கு ஆபிரிக்க தேசத்தில் ஜனநாயக சீர்திருத்தங்களைச் செயல்படுத்தியதற்காக பாராட்டப்பட்டார், ஆனால் 2012 இல் ஒரு இராணுவ சதித்திட்டத்தில் வெளியேற்றப்பட்டார்.
டூரே 1991 இல் ஆட்சிக்கு வந்தார், 22 வருட கடுமையான ஆட்சியின் பின்னர், சர்வாதிகாரி மௌசா ட்ரோருக்கு எதிராக ஆட்சி கவிழ்ப்பை நடத்தினார்.