இலங்கையில் கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 17 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இன்றைய(15.11.2020) தினம் மேலும் 544 பேருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இன்று தொற்று உறுதி செய்யப்பட்ட அனைவரும், ஏற்கனவே நோய்த்தொற்றுக்கு ஆளானவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி இலங்கையில் தற்போது வரையில் 17 ஆயிரத்து 127 பேருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.