சிறைச்சாலைகளில் ஏற்படும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த விசேட ஏற்பாடு.

THUSHARA.UPULDENIYA.1591190547.New .Commissioner.General.of .Prisons.appointed l
THUSHARA.UPULDENIYA.1591190547.New .Commissioner.General.of .Prisons.appointed l

சிறைச்சாலைகளில் ஏற்படும் , கொரோனா தொற்றை கட்டுப்படுத்த விசேட வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உப்புல்தெனிய தெரிவிக்கின்றார்.

இதன்படி, சிறைச்சாலையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட கைதிகள், பிரத்தியேக கூடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நேருக்கு நேர் சந்திக்கும் நடவடிக்கைகள், கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட கைதிகள் மற்றும் சிறைச்சாலை உத்தியோகத்தர்களை தங்கவைக்கும் வகையில், மூன்று நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக, துஷார உப்புல்தெனிய தெரிவிக்கின்றார்.

இதன்படி, தொற்றினால் பாதிக்கப்படும் நபர்கள், கந்தகாடு, கல்லெல்ல மற்றும் வெலிகந்த ஆகிய நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்படுவதாக அவர் குறிப்பிடுகின்றார்.