3700க்கும் அதிகமான முறைப்பாடுகள்!!

5 ad
5 ad

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக இதுவரையில் 3729 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, கடந்த மாதம் 8ஆம் திகதியில் இருந்து நேற்று வரையான காலப்பகுதியிலேயே இந்த முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

வன்முறை சம்பவங்கள் தொடர்பாக 27 முறைப்பாடுகளும் தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக 3596 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன.

நேற்றைய தினத்தில் மாத்திரம் 102 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அவை அனைத்தும் தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாகவே பதிவாகியுள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.