த.தே.கூவின் சஜித் ஆதரவு கூட்டம் ஆரம்பமானது !!

3a
3a

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதிவேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவுதெரிவித்து யாழில்தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படும் மாபெரும்கூட்டம் ஆரம்பமாகியுள்ளது.

வடக்குமாகாண சபையின் தலைவர் சி.வி.கே.சிவஞானம்தலைமையில் யாழ். முத்திரை சந்தியில்அமைந்துள்ள சங்கிலியன் பூங்காவில் இந்த கூட்டம் இடம்பெற்றுவருகிறது.

நிகழ்வில்தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும்,நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் , உலகத்தமிழர் பேரவையின் தலைவர் இம்மானுவல் அடிகளார்,இங்கை தமிழ் அரசுக் கட்சியின்தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை. சோ. சேனாதிராஜா,தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும்,நாடாளுமன்ற உறுப்பினருமான எம். ஏ. சுமந்திரன்,புளொட் அமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான த. சித்தார்த்தன், ரெலோஅமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர்கலந்துகொண்டனர்.

அத்துடன் வடக்குமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள்,உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் பெருமளவான பொதுமக்களும்கலந்து கொண்டனர்.