ஊடகங்களுக்கு தேர்தல் முடிவுகள் இல்லை

0 eee
0 eee

தேர்தல் சட்டவிதிகளை மீறி செயற்பட்ட 4 ஊடகங்களிற்கு தேர்தல் முடிவுகள் வழங்கப்படாது என தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.

அரச ஊடகங்களான இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம், சுயாதீன தொலைக்காட்சி சேவை மற்றும் தனியார் ஊடகங்களான ஹிரு, தெரண ஆகியவவை தேர்தல் விதிகளை மீறி, வேட்பாளர்களை ஆதரித்திருந்தன.

அந்தவகையில் அரச ஊடகங்கள் இரண்டு சஜித் பிரேமதாசவையும், தனியார் ஊடகங்கள் இரண்டு கோட்டாபய ராஜபக்சவையும் ஆதரித்திருந்தன.

இதையடுத்து, இந்த நான்கு ஊடகங்களிற்கும் தேர்தல் முடிவுகளை வழங்குவதில்லையென தேர்தல்கள் ஆணையாளர் இன்று அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.