உப நகராதிபதிக்கு விளக்கமறியல்!!

8 hg
8 hg

கைது செய்யப்பட்டுள்ள கோட்டை நகர சபையின் உப நகராதிபதி பிரேம்லால் அத்துகோரல இம்மாதம் 15ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுகேகொட மேலதிக நீதவான் எச்.யு.கே.பல்பொல உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு சேறு பூசும் வகையிலான துண்டு பிரசுரங்களை விநியோகித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ஹர்ஷ டி சில்வாவின் செயலாளர் உள்ளிட்ட இருவருக்கு தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பிலேயே குறித்த உப நகராதிபதி கைது செய்யப்பட்டுள்ளார்.