இலங்கையின் மிகப் பெரிய காற்றாலை நாளை திறக்கப்படுகின்றது !

download 5 2
download 5 2

மன்னாரில் அமைக்கப்பட்டுள்ள இலங்கையின் மிகப் பெரிய காற்றாலை நாளை செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்குத் திறக்கப்படவுள்ளதாக சூரிய சக்தி, காற்று மற்றும் நீர்மின் உற்பத்தி திட்டங்களுக்கான அபிவிருத்தி அமைச்சர் துமிந்த திசாநாயக்க இன்று தெரிவித்தார்.

இந்நிகழ்வுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமை தாங்கவுள்ளார். இலங்கையின் கவனம் புதுப்பிக்கத்தக்க சக்தியில் வெற்றிகரமாக உள்ளது எனச் சுட்டிக்காட்டிய அமைச்சர், காற்றாலை மூலமான மின் உற்பத்தி சுற்றுச்சூழலுக்கு உகந்தது என்றும் குறிப்பிட்டார்.