சஜித்தை சீண்டினால் இனி வழக்கு- ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம்

sajith premadasa 2 720x450 1
sajith premadasa 2 720x450 1

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ மீது சேறுபூசும் ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக வழக்குத் தொடரத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தின்போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

சஜித் பிரேமதாஸ மீதான சேறுபூசல்கள் கடந்த சில மாதங்களாக அதிகரித்திருப்பதால்  இந்த முடிவை அக்கட்சி எடுத்துள்ளது.

வழக்கு சார்ந்த நடவடிக்கைகளை எடுப்பதற்கு கட்சியின் சட்டப் பிரிவை நாடவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளனர்.