‘கொரோனா’வால் இம்மாதம் 10 நாளில் 31 பேர் உயிரிழப்பு!

MzU5MzU4NQ 1
MzU5MzU4NQ 1

இலங்கையில் கொரோனா வைரஸ் மூன்றாவது அலை மூலம் நேற்றிரவு வரை 26 ஆயிரத்து 981 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் இதுவரையில் 134 பேர் பலியாகியுள்ளனர். (அக்டோபர் 24 முதல் நேற்று வரை)

மினுவாங்கொட கொத்தணிமூலம் 3 ஆயிரத்து 59 பேருக்கும், பேலியகொடை கொத்தணி மூலம் 23 ஆயிரத்து 922 பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் 18 ஆயிரத்து 922 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மாத்திரம் 538 பேருக்கு வைரஸ் தொற்றியது.

அதேவேளை, இலங்கையில் நேற்றுவரை மொத்தமாக 30 ஆயிரத்து 612 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் 22 ஆயிரத்து 260 பேர் குணமடைந்துள்ளனர்.

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் நேற்றும் மூவர் உயிரிழந்துள்ளனர். இதன்படி இலங்கையில் கொரோனாத் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 147 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள். நவம்பரில் மாத்திரம் 98 பேர் உயிரிழந்துள்ளனர். டிசம்பரில் கடந்துள்ள 11 நாட்களில் 31 பேர் பலியாகியுள்ளனர்.