மனைவியை கத்தியால் குத்திய கணவன்!

Woman murdered 3427
Woman murdered 3427

மட்டக்களப்பு – புதுக்குடியிருப்பு பகுதியில் நபர் ஒருவர் அவரது மனைவியை கத்தியால் குத்தி பாரிய காயங்களுக்கு உள்ளாக்கியுள்ளார்.

விளக்கமறியலில் இருந்து விடுதலையாகி வீட்டுக்கு வருகை தந்ததன் பின்னரே இவ்வாறு அவர் செய்துள்ளார்.

குறித்த நபர் அவரது மனைவியை 13 தடவைகள் கத்தியால் குத்தியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த பெண்ணுக்கு இரு பிள்ளைகளும் காணப்படுகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளாந்த ஜீவனோபாயத்திற்கு பணம் கொடுக்காமையே கணவன் மற்றும் மனைவிக்கிடையில் தகராறு ஏற்பட காரணமாக அமைந்துள்ளது என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த பெண் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.