தெல்தோட்டை – கிரேட்வெலி தோட்டத்தை சேர்ந்த 6 குடும்பங்களுக்கு உட்பட்ட சுமார் 30 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அந்த பகுதியில் கொரோனா தொற்றுறுதியான ஒருவர் அடையாளம் காணப்பட்டதையடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கண்டி நகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மூடப்பட்ட 45 பாடசாலைகளில் 42 பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை திறக்கப்படவுள்ளன என மத்திய மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.