பி.சி.ஆர். பரிசோதனைகளின் எண்ணிக்கை 10 இலட்சத்தை நெருங்கியது

pcr
pcr

இலங்கையில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளின் எண்ணிக்கை 10 இலட்சத்தை நெருங்கியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டில் அதிகளவில் அதாவது நேற்று (11) மாத்திரம் 17 ஆயிரத்து 425 பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அந்தவகையில் கடந்த பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி முதல் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பிரிசோதனைகளின் மொத்த எண்ணிக்கை 9 இலட்சத்து 88 ஆயிரத்து 964ஆக காணப்படுகின்றது.