கொக்குத்தொடுவாய் பகுதி மக்களை சந்தித்தார் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்!

Selvaraja Kajendiran
Selvaraja Kajendiran

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் அவர்கள் கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்கள் சந்திப்பு ஒன்றை நடாத்தினார்

மகாவலி அதிகார சபையினால் உள்வாங்கப்பட்டு பல்வேறு சிக்கல்களுக்கு முகம் கொடுத்துள்ள மக்களின் காணிப் பிரச்சினைகள் மற்றும் பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயும் முகமாக குறித்த மக்கள் சந்திப்பு இடம்பெற்றது

இன்று காலை 11 30 மணியளவில் கொக்குத்தொடுவாய் பகுதியில்  குறித்த கலந்துரையாடல் இடம் பெற்றிருந்தது குறித்த கலந்துரையாடலில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உறுப்பினர் கணபதிப்பிள்ளை விஜயகுமார் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்

குறித்த சந்திப்பில்  கலந்து கொண்ட மக்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள் குறித்த பகுதியில் இடம் பெறுகின்ற மகாவலி ஆக்கிரமிப்பு மற்றும் தங்களுடைய பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களுக்கு தெரியப்படுத்தினர் குறிப்பாக தங்களுடைய பிரதான வீதி மற்றும் வயல் நிலங்களுக்கு செல்கின்ற வீதிகளின்  பிரச்சினைகள்  உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக இதன்போது மக்கள் தெளிவுபடுத்தினர் 

IMG 7580
IMG 7573
IMG 7579
IMG 7570