தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு மற்றுமொரு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய அவர் நாடாளுமன்றத்தில் மற்றுமொரு ஆலோசனைக்குழுவிற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேயவர்தனவினால் இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த குழுவானது நாட்டின் அபிவிருத்தியிலும் வளர்ச்சியிலும் பங்குகொள்ளும் முகவர் நிறுவனங்களினது நடவடிக்கைகளை கண்காணிக்கும் ஆலோசனைக் குழுவாகும்.
இவற்றில் யு.என்.டி.பி, யு.எஸ்.ஏ.ஐ.டி, தேசிய ஜனநாயக நிறுவனம் (என்.டி.ஐ), சர்வதேச குடியரசு நிறுவனம் (ஐ.ஆர்.ஐ) வெஸ்ட்மின்ஸ்டர் ஃபவுண்டேஷன் ஃபார் டெமாக்ரசி (டபிள்யூ.எஃப்.டி)ஆகிய நிறுவனங்கள் அடங்குகின்றன.
இதன் முதல் கூட்டமானது எதிர்வரும் 8 ஆம் திகதி நடைபெறவுள்ளது.