new update யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் முன்னெடுத்துள்ள உணவு தவிர்ப்பு போராட்டத்தில் யாழ்.இந்துக்கல்லூரியின் உயர்தர மாணவனும் இணைந்து கொண்டான்.

VideoCapture 20210110 071737
VideoCapture 20210110 071737
VideoCapture 20210110 091824
VideoCapture 20210110 091824

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் முன்னெடுத்துள்ள உணவு தவிர்ப்பு போராட்டம் இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது.

VideoCapture 20210110 071730


யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் பல்கலைக்கழக நிர்வாகத்தால் கடந்த 8 ஆம் திகதி இடித்தழிக்கப்பட்டுள்ளது.


இந்த செய்தியை அறிந்து மாணவர்களும், அரசியல் பிரதிநிதிகளும் மற்றும் ஆர்வலர்களும் இராமநாதன் வீதியில் எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருதனர்.

VideoCapture 20210110 071741


தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு போராட்டம் தற்போதைய கொரோனா அச்ச நிலை காரனமாக கைவிடப்படுவதாகவும், சில மாணவர்கள் தொடர்ந்தும் உண்ணா நோன்பு போராட்டத்தை முன்னெடுப்பார்கள் எனவும் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நேற்றையதினம் அறிவித்தல் விடுத்திருந்தது.

VideoCapture 20210110 071721


இதனால் நேற்று பிற்பகலில் இருந்து மாணவர்கள் ஆரம்பித்துள்ள உணவு தவிர்ப்பு போராட்டம் தற்போதுவரை முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள உணவு தவிர்ப்பு போராட்டத்தில், யாழ்.இந்துக்கல்லூரியின் உயர்தர மாணவனும் இணைந்து கொண்டான்.