இறந்தோரை நினைவுகூரும்உரிமை தமிழருக்கு உண்டுஅனைத்து: பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

download 14
download 14

உயிரிழந்தோரை நினைவு கூருவது உரிமையாகும். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அழிக்கப்பட்டதற்கு வன்மையாகக் கண்டிப்பதுடன், அந்தச் செயலுக்கு எதிராக குரல் கொடுப்போம்.’ என்று அனைத்துப் பல்கலைக்கழகங்களின் மாணவர் ஒன்றியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதன் தலைவர் ரத்கரவ்வே ஜினரத்ன தேரர் நேற்று வெளியிட்ட அந்த அறிக்கையில்,

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த இறந்தவர்களின் நினைவுச் சின்னம் உடைக்கப்பட்டு பலவந்தமாக அகற்றப்பட்டுள்ளது. 8ஆம் திகதி இரவு இதை அகற்றத் தயாராகும் போது மாணவர்களும் பிரதேச மக்களும் எதிர்த்தமையால் பல்கலைக்கழகத்திற்கு ஆயுதப் படை வரவழைக்கப்பட்டுள்ளது.

பல தசாப்தங்களாக நடைபெற்ற படுகொலை போரால் ஆயிரக்கணக்கான மனிதர்கள் இறந்துள்ளனர் – அங்கவீனமடைந்துள்ளனர் – சொத்துக்கள் அழிக்கப்பட்டன.
சுருக்கமாகச் சொல்வதாயிருந்தால், அது, மனித நேயம் மரணித்த காலம். அந்த படுகொலை போரில் உயிரிழந்த தமது உறவினர்களை, நண்பர்களை, தமக்கு நெருக்கமானவர்களை நினைவு கூர்வதற்காக பல்கலைக்கழக மாணவர்கள் இந்த நினைவுச் சின்னத்தை நிர்மாணித்திருந்தனர்.

பொதுச் சமூக நோக்கத்திற்காக, இறந்த மனிதர்கள் தெற்கிலும் நினைவு கூரப்படுகின்றனர். நினைவுச் சின்னங்களும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. முப்பது வருட போரில் இறந்த இராணுவத்தினரை நினைவு கூரும் தூபிகள் தெற்கில் ஏராளமாக உள்ளன. அவர்கள் நினைவு கூரல் விழாக்களை நடத்துகின்றனர்.

71 போராட்டத்தின் போது, 88-89 பயங்கர காலத்தில் கொலை செய்யப்பட்ட மனிதர்களை நினைவு கூருவதற்கான நிகழ்ச்சிகள் தெற்கில் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இறந்த மனிதர்களை நினைவு கூரும் அந்த உரிமை வடபுல மக்களுக்கும் அவ்வாறே கிடைக்க வேண்டும். அவர்கள் நடத்திய போராட்டம் நீதியானதா அநீதியானதா என்பது தனியாகப் பேசப்பட வேண்டிய ஒன்று. அரசியல் கருத்து பேதங்கள் எதுவாக இருந்தாலும் தமக்காகத் தோற்றி நின்று இறந்ததாகக் கருதப்படும் மனிதர்களை நினைவு கூர வடபுல மக்களுக்கும் உரிமை உண்டு.

இது ஜனவரி 08ம் திகதி நடந்த தனிப்பட்ட சம்பவமல்ல. இதற்கு முன்பும் வடபுலத்தில் இறந்தவர்களை நினைவு கூரும் நிகழ்ச்சிகளை அரசு தடை செய்தது. ஆயுதங்களைக் கொண்டு அவற்றை தடுத்தது.

இப்போது இறந்தவர்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட சின்னங்கள் உடைக்கப்பட்டுள்ளன. இது பல்கலைக்கழக நிர்வாகத்தின் செயலாகுமெனக் கூறி பல்கலைக் கழக மானியங்கள் ஆனையமும், அரசும் கை கழுவிக்கொள்ள தயாராகின்றன. ஆனால், இது அரசு திட்டமிட்டு செய்த செயலாகும் என்பது தெளிவாகத் தெரிகிறது.

வடக்கில் இறந்தவர்களை நினைவு கூரும் தினங்களை தடை செய்ய வேண்டுமென, சின்னங்களை அகற்ற வேண்டுமெனச் சொல்வது தீவிரவாதம் உருவாவதை தடுப்பதற்காம். ஆனால், ஆட்சியாளர்கள் அறிந்து கொண்டே தீவிரவாதம் வேரூன்றுவதற்காக மீண்டும் நிலத்தை செப்பனிடுகிறார்கள். நினைவுச் சின்னங்களை நிர்மாணிப்பதாலோ அல்லது நினைவு கூரல் நிகழ்ச்சிகளை நடத்துவதாலோ தீவிரவாதம் உருவாவதில்லை. அதை மிதித்து சிதைத்து விடுவதால்தான்.
எனவே, தெற்கில் போன்றே வடக்கிலும் இறந்தவர்களை நினைவு கூரும் உரிமை உண்டென்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் – என்றுள்ளது