நாளைய தினம் திறக்கப்படவுள்ள பாடசாலைகள்!

Gl Peris
Gl Peris

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்காக, மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகள் நாளைய தினம் திறக்கப்படவுள்ளன.

குறித்த மாணவர்களின் விடுபட்ட பாடத்திட்டங்களை உடனடியாக முன்னெடுப்பதற்காக இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் மீள திறப்பது தொடர்பில், பிரதேச அபிவிருத்தி குழுக்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, மேல் மாகாணத்தில் 900 இற்கும் அதிகமான பாடசாலைகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி திறக்கமுடியும் என தாம் எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.