தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்பட்ட சில பிரதேசங்கள்!

87eed86851a12a04375adabc440416ab XL
87eed86851a12a04375adabc440416ab XL

தனிமைப்படுத்தப்பட்டுள்ள சில பிரதேசங்கள் இன்று (24) பிற்பகல் 6.00 மணிமுதல் தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்படுவதாகவும் மேலும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்படுவதாகவும் இராணுவத்தளபதி ஜனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன்படி, வெல்லவத்தை காவல்துறை பிரிவின் நஸீர் தோட்டம், நிட்டம்புவ காவல்துறை பிரிவின் திஹாரிய வடக்கு மற்றும் திஹாரிய கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளின் வாரண பன்சல வீதி, கன்தொட வீதி, ஹித்ரா மாவத்தை ஆகிய பிரதேசங்களும் மினுவங்கொடை காவல்துறை பிரிவின் கல்ஒலுவ கிழக்கு, கால் ஒலுவ மேற்கு ஆகிய பிரதேசங்கள் தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்படுகின்றன.

அதேபோல், இன்று மாலை 6 மணி முதல் மினுவங்கொடை காவல்துறை பிரிவின் கல்ஒலுவ பிரதேசத்தில் ஜூம்மா மஸ்ஜித் மாத்தை, ஹித்ரா மாவத்தை, அலுத்பார மற்றும் அகரகொட ஆகிய பிரதேசங்கள் புதிதாக தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.