வடக்கு கிழக்கு காணிகளில் 95% உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டு யுத்தத்திற்கு பின்னர் இதுவரையில், வடக்கு கிழக்கு மாகாண காணிகளில் 97% சதவீதமானவை அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியல் அட்மிரல் சரத் வீரசேகர இன்று (10) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ராஜமாணிக்கம் முன்வைத்த கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
97% சதவீதமான காணிகள் இதுவரையில் கையளிக்கப்பட்டுள்ளன. எஞ்சிய காணிகள் தேசிய பாதுகாப்பு கருதியே வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
தனியார் காணிகள் இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ளன. எஞ்சிய காணிகள் குறித்து கேள்வி எழுப்ப முடியாது. அவை பாதுகாப்புக்கு உட்பட்ட விடயமாகும் என்றும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.