ஒரு சமுக மாற்றத்தில் அரசியல் பங்களிப்பு என்பது மிகவும் பிரதானமானது என்று தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் ஆலங்குளம் மற்றும் குகநேசபுரம் கிராமங்களுக்குச் சென்று அப்பகுதி மக்களை சந்தித்து உரையாற்றும் போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தெடரந்து உரையாற்றுகையில்
கடந்த காலங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த யோகேஸ்வரன் ஐயாவின் சொந்த பிரதேசத்தில் உள்ள பாடசாலை மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தான் பிறந்த பிரதேசத்தில் உள்ள பாடசாலைக்கு மூடுவிழா வைத்து விட்டு அரசியல் செய்வதில் என்ன பிரயோசனம். இப்படிப்பட்டவர்கள் தான் கடந்த காலங்களில் மக்களின் வாக்குகளால் மக்கள் பிரதிநிதிகளாக இருந்தவர்கள். என்னை இல்லாமல் செய்ய வேண்டும் என்னை அழிக்க வேண்டும் என்று எதிரிகள் சிறைக்கு அனுப்பினார்கள்.
அவர்களது என்னங்கள் நிறைவேறாமல் போனது. என்னை இல்லாமல் செய்ய வேண்டும் என்று நினைக்கும் எதிரிகள் எனது எதிரிகள் அல்ல எனது கொள்கைகளை ஏற்றுக்கொண்டு என்னோடு பயனிக்கும் உங்களது எதிரிகள் என்று நினைத்துக் கொள்ளுங்கள் என தெரிவித்தார்.
இதன் போது மக்களால் நாடாளுமன்ற உறுப்பினரின் சேவைகளை பாராட்டி பொண்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
இந் நிகழ்வில் வாகரை பிரதேச சபை தவிசாளர் கண்ணப்பன் கனேசன், கட்சியின் பிரதேச அமைப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.