பெருந்தோட்ட நிறுவனங்கள் மீது ஜே.வி.பி குற்றச்சாட்டு

download 1 24
download 1 24

பெருந்தோட்ட தொழிலாளர்களை தனித்துவிடுகின்ற செயற்பாடுகளையே பெருந்தோட்ட நிறுவனங்கள் முன்னெடுத்து வருவதாக ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது.

அதன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் சந்திரசேகரன் யாழ்பாணத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொழிலாளர்களுக்கும், தொழிற்சங்கங்களுக்குமான தொடர்பினை இல்லாது செய்வதற்கான முயற்சிகளை அவர்கள் முன்னெடுத்து வருவதாக ராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.