எதிர்க்கட்சியை பலப்படுத்தும் எந்தச் சதிக்கும் துணை போகமாட்டோம்- மஹிந்த அமரவீர

அமரவீர 720x380 1
அமரவீர 720x380 1

எதிர்க்கட்சியினரைப் பலப்படுத்தும் எந்தவொரு அரசியல் தீர்மானங்களுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒத்துழைப்பு வழங்காது என சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு இது தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“தற்போதைய அரசைப் பலவீனமடையச் செய்யும் சிலர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் கூட்டுக்கு அழைக்கின்றனர். எமது கட்சி இதற்கு ஒருபோதும் துணைபோகாது.

இந்த அரசு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆலோசனைகளையும் ஏற்றுக்கொண்டுதான் செயற்படுகின்றது. ஜனாதிபதியும், பிரதமரும் இணங்கித்தான் செயற்படுகின்றனர். இவர்களின் தலைமையின் கீழ் உருவாக்கப்பட்ட அரசே தற்போது ஆட்சியிலும் உள்ளது.

நாம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் என்ற வகையில் அரசையே பிரதி நிதித்துவப்படுத்துகின்றோம். இதனால் நாம் ஒருபோதும் இந்த அரசைக் குழப்புவதற்கு அல்லது தற்போதைய அரசை மாற்றிமைப்பதற்கு உடன்படப் போவதில்லை. எதிர்க்கட்சியினரைப் பலப்படுத்துவதற்கு எடுக்கப்படும் எந்தச் சூழ்ச்சிகளுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒத்துழைக்காது என தெரிவித்துள்ளார்.

.