தோட்டத் தொழிலாளர்களுக்கு 30,000 ரூபா கிடைக்கின்றதா என ஜனாதிபதி ஆராய வேண்டும்

MANO 1
MANO 1

தோட்டத் தொழிலாளர்களுக்கு மாதாந்தம் 30,000 ரூபா வேதனம் கிடைக்கின்றதா என ஜனாதிபதி ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரூபா என்ற வீதம் மாதாந்தம் 30,000 ரூபா வேதனம் கிடைக்கின்றதா என ஜனாதிபதி ஆராய்ந்து பார்க்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

நாட்டின் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக திகழும் பெருந்தோட்டத் தொழிலாளர்களை மறந்து அரசாங்கம் செயற்படுவதாகவும் அவர் கூறினார்.