முல்லைத்தீவு இந்து தமிழ்க் கலவன் பாடசாலையில், நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு, இரத்ததானம் வழங்கப்படவுள்ளது.
இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மின்னியலாளர் ஒன்றியம் ஆகியவற்றின் இணை ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.
‘உதிரம் கொடுத்து உயிர் காப்போம்’ எனும் தொனிப்பொருளில் இந்த இரத்ததான நிகழ்வு இடம்பெறவுள்ளது.
லயன்ஸ் கழகம், சங்கங்கள், பொது அமைப்புகள் பல இணைந்து இதற்கு ஆதரவு வழங்கியுள்ளன.