இணையதள மனுவில் கையொப்பமிட ஆசிரியர்கள் தீர்மானம்

ஜோசப் ஸ்டாலின்
ஜோசப் ஸ்டாலின்

அதிபர் – ஆசிரியர்கள் சம்பள பிரச்சினையை அரசாங்கம் தீர்க்க வேண்டும் என கோரி இணையதளத்தின் ஊடாக மனுவில் கையொப்பமிட தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (14) முதல் குறித்த நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர்கள் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை தொடரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.