கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை ஒக்டோபர் முதலாம் திகதி முதல் நீக்குவது தொடர்பில் இறுதித் தீர்மானம் இதுவரை எடுக்கப்படவில்லை என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“தனிமைப்படுத்தல் முடக்கத்தை நீக்கி நாட்டைத் திறப்பது தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை. எனினும், இது குறித்த இறுதித் தீர்மானத்தை ஜனாதிபதியே அறிவிப்பார் என்றார்.