ஊரடங்கு நீக்கப்பட்டதன் பின்னர் புகையிரத சேவைகள் முன்னெடுக்கப்படாது

1624072051 indian railways 2
1624072051 indian railways 2

எதிர்வரும் முதலாம் திகதி முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்பட்டாலும், இரு வாரங்களுக்கு புகையிரத சேவைகள் முன்னெடுக்கப்பட மாட்டாது என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

கொவிட் பரவல் காரணமாக நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது.

இதனையடுத்து, பொதுப்போக்குவரத்து சேவைகளும் இடைநிறுத்தப்பட்டன.

இந்நிலையில், எதிர்வரும் முதலாம் திகதி அதிகாலை 4 மணியுடன் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்பட உள்ளதாக இன்று அரசாங்கம் அறிவித்தது.

இதன்படி, தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்பட்டாலும் இரண்டு வாரங்களுக்கு புகையிரத சேவைகள் முன்னெடுக்கப்பட மாட்டாது என இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.