மொட்டு’வைத் தொடர்ந்து விமர்சித்தால் கன்னத்தில் அறையவும் நாங்கள் தயார்-திஸ்ஸ குட்டியாராச்சி

குட்டியாராட்சி
குட்டியாராட்சி

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர்களை இலக்குவைத்து பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் தொடர்ந்தும் சொற்போர் தொடுத்தால், பங்காளிகளின் கன்னத்தில் அறைவதற்குக்கூட நாம் தயார்.

என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின்நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

அரசுக்குள் இருந்துகொண்டு சுகபோகங்களை அனுபவித்து விமர்சனங்களை முன்வைப்பதைவிட, வெளியில் சென்று முதுகெலும்புடன் விமர்சனங்களை முன்வைப்பதே மேல்.

எங்கள் கட்சித் தலைவர்களை விமர்சனங்களால் தொடர்ந்தும் தாக்கினால், பின்வரிசை நாடாளளுமன்ற உறுப்பினகளாகிய நாம் பங்காளிகளின் கன்னத்தில் அறையக்கூட தயாராகவே இருக்கின்றோம் – என்றார்.